வெளியில் திரிந்ததால் தடுத்து நிறுத்திய பெண் போலீசாரிடம் வீம்பு காட்டிய இளைஞர்.! கடைசியில் நிகழ்ந்தது என்ன தெரியுமா?
One young boy Not follow the government guidelines

இந்தியாவில் கொரோன வைரஸ் அதிக அளவில் பரவி வருவதால் மத்திய அரசு வரும் ஏப்ரல் 15-ம் தேதிவரை யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களான மருத்துவ, காய்கறி, மளிகை பொருட்கள் மட்டுமே வாங்க வெளியில் சென்று வர அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் அத்துமீறி வெளியில் செல்பவர்களிடம் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை தங்கள் வீட்டிலையே இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சாலையில் சென்ற இளைஞர் ஒருவரை பெண் போலீஸ் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.
அவரிடம் அந்த இளைஞர் சரியான பதிலை அளிக்காமல் வீணாக வீம்பு இழுந்துள்ளார். மேலும் முதலமைச்சர் அவர்களை தனது சொந்த ஊருக்கு வரும்படி மிகவும் திமிராக பேசியுள்ளார். அதனை அடுத்து போலீசார் அந்த இளைஞரை அழைத்து சென்று முட்டி போட செய்து அடித்துள்ளனர்.