×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கடலூரில் பயங்கரம்.! போலீஸ் மீது தாக்குதல்.! என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை!

கடலூர் மாவட்டத்தில் ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்த ரவுடியை போலீசார் என்கவுன்டர் செய்தனர்.

Advertisement

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை மலட்டாறு என்ற பகுதியில் வீரா என்ற நபர் நேற்று முன்தினம் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீராவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து போலீசார், தனிப்படை அமைத்து இந்த கொலைக்கு காரணமானவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் புதுப்பேட்டை மலட்டாறு பகுதியில் குற்றவாளிகள் 7 பேர் சுற்றி வளைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் கிருஷ்ணா என்பவர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அதனால் அவரை போலீசார் என்கவுண்டர் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் போலீசார் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த என்கவுண்டர் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணாவிற்கும், வீராவிற்கும் ஏற்கெனவே முன்பகை இருந்ததாகவும் அதனால்தான் இந்த கொலை நடந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Encounter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story