5 மாத பிஞ்சு குழந்தைக்கு பெற்ற தாயே விஷம் கொடுத்த சோக சம்பவம்... பதற வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
விழுப்புரத்தில் பெற்ற தாயே தனது குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் பாப்பான் குளம் பகுதியை சேர்ந்தவர்கள் சாதிக்பாஷா - யாஸ்மின் தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பிறந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவித்து வந்துள்ளார் சாதிக்பாஷா, இதில் பெண் குழந்தை வேறு பிறந்துள்ளது என்று எண்ணிய யாஸ்மின் அந்த குழந்தையை கொன்று விட முடிவு செய்துள்ளார்.
அதன்படி யாஸ்மின் இரவு குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தூங்க வைத்துள்ளார். மறுநாள் காலை குழந்தை எந்த வித அசைவின்றி கிடந்துள்ளது. அதனையடுத்து சாதிக்பாஷா குழந்தையை தூக்கி கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாதிக்பாஷா தனது குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதன் பேரின் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் குழந்தை இறப்பதற்கு முன் நாள் அருந்திய பாலில் விஷம் கலந்திருந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் போலீசார் யாஸ்மினிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் யாஸ்மின் தனது தவற்றை ஒப்பு கொண்டுள்ளார். இதனையடுத்து யாஸ்மினை கைது செய்த போலீசார் அவரை கடலூர் சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362