Breaking: தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
One more new positive corono case at tamilnadu
தமிழகத்தில் ஏற்கனவே 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மேலும் ஒருவருக்கு புதிதாக கொரோனா இருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 300 பேருக்கு மேல் தொற்றியுள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மும்பையை சேர்ந்த 60 வயது முதியவர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த நபர் ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.