40 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை! கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த முதியவருக்கு, ஊருக்கு திரும்பிய பின் நேர்ந்த கொடூரம்!
Oldman cheated and throw from house for property
மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி குமரி.இவர்களுக்கு இரு மகன்கன், இரு மகள்கள் உள்ளனர். இரு மகன்களும் வெளிநாட்டில் வேலை புரிந்து வந்துள்ளனர். மகள்களுக்கு திருமணமாயிற்று. முதியவரான நாகராஜன் சுமார் 40 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் எலக்ட்ரிகல் கேபிள் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
மேலும் தனது கடுமையான உழைப்பால் மாடி வீடு, வணிக வளாகம் என 2 கோடி மதிப்பில் சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து வயது முதுமை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிய அவர், நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டுமென எண்ணியுள்ளார். ஆனால் ஊருக்கு வந்த அவரிடம் அனைத்து சொத்துக்களையும் தங்களது பெயரில் மாற்றி தரவேண்டும் என அவரது மனைவியும், குடும்பத்தினரும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் நாகராஜன் சொத்துக்களை எழுதி தர மறுத்துள்ளார். அதனால் அவரது குடும்பத்தினர் நாகராஜனை வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் சாலைகளில் சுற்றி திரிந்து வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சரியாக உணவு, தண்ணீர் இல்லாமல் சாலையில் திரிகிறேன். 40 ஆண்டுகளாக உழைத்து நிம்மதியாக வாழ வேண்டிய நேரத்தில் என்னை எனது குடும்பத்தினர் என்னை அடித்துத் துரத்திவிட்டனர் என கண்கலங்க தெரிவித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362