×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சரக்குகளுடன் மிடுக்காக வந்த முதியவர் கைது.!

சரக்குகளுடன் மிடுக்காக வந்த முதியவர் கைது.!

Advertisement

ரோடு மாவட்ட சென்னிமலை பகுதியில் கண்காணிப்பதற்காக சப்- இன்ஸ்பெக்டர் பிரியா ரோந்து சென்றுள்ளார். அங்கு சந்தேகம் படும்படி ஒரு நம்பர் சென்றுள்ளார். சப்- இன்ஸ்பெக்டர் பிரியா அந்த நபரை பிடித்து விசாரணை செய்துள்ளார். 

அப்போது, அந்த நபர் 30 சரக்கு பாட்டில்களுடன் கூலாக நடந்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அந்த மது பாட்டில்கள் அனைத்தும் அரசு அனுமதியின்றி ப்ளாக்கில் விற்பனை செய்ய வைத்திருப்பதாக தெரிகிறது. 

மேலும், அந்த நபர் குறித்து விசாரித்ததில், அவர் சென்னிமலை பகுதியில் உள்ள சிதம்பரம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் நாகராஜ், வயது 58 என்றும் , அவர் கூலி வேலை செய்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.  பின்னர், அந்த நபரை உடனடியாக கைது செய்து, அவர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளார்.

மது பாட்டிலை அனுமதியின்றி விற்பனை செய்வதற்காக எடுத்து சென்றது தவறுதான் என்றபோதிலும், அதை அரசு விற்றால் தவறில்லை என்பதில் என்ன நியாயம் இருக்கிறதோ? "மது அருந்தினால் உடல் நலத்திற்கு கேடு" என்ற வாசகத்துடன் தான் மது விற்பனையும் அமோகமாக நடந்து வரும் அவலம் ஏற்பட்டு வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Liquor Drinks #tamilnadu #tasmac #erode news #சென்னிமலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story