5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை 60 வயது முதியவர் செய்த கொடூரச்செயல்! மருத்துவப்பரிசோதனையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!
oldman abused young girl
மதுரையில், முதியவர் ஒருவரால் 5ஆம் வகுப்பு மாணவி பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 5ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி, தான் வசிக்கும் பகுதியில் உள்ள கடைக்கு மற்றும் பள்ளிக்கு சென்று வரக்கூடிய வேலையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் அடிக்கடி சிறு, சிறு உணவு பண்டங்கள் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பெற்றோரை இழந்த 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தனது தாத்தா - பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.அந்தச் சிறுமியை அவரது தாத்தா மற்றும் உறவினர்கள் ஹாஸ்டலில் சேர்ப்பதற்காக சென்ற போது, அங்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது மருத்துவர்கள் சிறுமிக்கு பாலியல் சீண்டல் நடைபெற்றதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து சிறுமியிடம் கேட்டப்போது சிறுமி உண்மையை கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை பிடித்து சரம்வாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து முதியவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362