×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

70 வயது மூதாட்டி மர்மமான முறையில் மரணம்.. போலீசார் தீவிர விசாரணை!

70 வயது மூதாட்டி மர்மமான முறையில் மரணம்.. போலீசார் தீவிர விசாரணை!

Advertisement

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள டி.ஏந்தல் கிராமத்தை சேர்ந்த 70 வயதான சின்ன பொண்ணு என்ற மூதாட்டி கிராம எல்லையில் உள்ள விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் மூதாட்டியின் உறுப்பினர்கள் அவருக்கு உணவு கொடுக்க வந்துள்ளனர்.

அப்போது மூதாட்டி கழுத்தில் காயம் மற்றும் உடல் முழுவதும் மிளகாய் பொடி தூவிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும், அவர் அணிந்திருந்த செயின், நெக்லஸ் உள்ளிட்ட 6 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலையில் தடயங்களை அழிக்க கொலையாளிகள் உடல் முழுவதும் மிளகாய் பொடியை தூவி உள்ளனர். மேலும், இந்த கொலை முன் விரோதம் காரணமாக செய்யப்பட்டதா? அல்லது நகைகளை திருட கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thittakudi #Cuddalore #T Enthal #Crime #Old Woman
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story