×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

10 வயது சிறுமிக்கு ஒரு வருடமாக பாலியல் தொல்லை கொடுத்துவந்த தந்தையின் நண்பர்.! தாய் எடுத்த அதிரடி முடிவு.!

10 வயது சிறுமிக்குப் ஒரு வருடமாக பாலியல் தொல்லை கொடுத்துவந்த தந்தையின் நண்பர்.! தாய் எடுத்த அதிரடி முடிவு.!

Advertisement

கோவை மாவட்டம், ஆலாந்துறை பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டு தனது 10 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இரண்டாவது கணவரின் நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த ஜீவானந்தம் என்பவா் 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். அவரது கொடுமை தாங்காமல் சிறுமி தனக்கு நடந்த கொடூரம் குறித்து தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் உடனடியாக காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளார்.

சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த்து ஜீவனந்தத்திடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு கடந்த ஓராண்டாக ஜீவானந்தம் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜீவானந்தம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dad friend #young girl #sexual torture
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story