×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பள்ளி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர்.! தட்டி தூக்கிய போலீஸ்.!

பள்ளி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர்.! தட்டி தூக்கிய போலீஸ்.!

Advertisement

தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்ட போதிலும் இதுதொடர்பான குற்றங்கள் குறைந்தப்பாடில்லை. இந்தநிலையில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த மகாவிஷ்ணு என்ற வாலிபர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியுடன் பழகி வந்துள்ளார். சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் சிறுமி மகாவிஷ்ணுவுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார்.

ஆனாலும் மகாவிஷ்ணு சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் மகாவிஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#school girl #college student #sexual torture
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story