மது போதையில் தகராறு... 70 வயது முதியவர் அடித்துக் கொலை.!!
மது போதையில் தகராறு... 70 வயது முதியவர் அடித்துக் கொலை.!!
திருச்சியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் 70 வயது முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கணபதி என்ற நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம்(70). அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் மது போதையிலிருந்தபோது அவருக்கும் மகாலிங்கத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த கணேசன் முதியவர் மகாலிங்கத்தை கம்பால் தாக்கியிருக்கிறார்.
இதில் படுகாயமடைந்த மகாலிங்கத்தை மீட்ட அக்கம் பக்கத்தினர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகாலிங்கம் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதையும் படிங்க: "இதுக்கு ஒரு முடிவே இல்லையா.." தெரு நாய்களால் பறி போன உயிர்.!! 18 வயதில் இளைஞர் பலி.!!
மேலும் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் கணபதியை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். மது போதையில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: மது போதையால் கொடூரம்... தந்தை அடித்து கொலை.!! மகன் கைது.!!