"காச வாங்குனா குடுக்க மாட்டியா"...? பெண்களிடம் எகிறிய ஊழியர்.!! சம்பவம் செய்த தாத்தா.!!
காச வாங்குனா குடுக்க மாட்டியா...? பெண்களிடம் எகிறிய ஊழியர்.!! சம்பவம் செய்த தாத்தா.!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கிய நபரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்த நிதி நிறுவன ஊழியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக குணா என்ற முதியவரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் புத்தேரி நகரை சேர்ந்தவர் குணா(66). இவர் கடந்த 2018 ஆம் வருடம் வீடு கட்டுவதற்காக காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில் அமைந்துள்ள நிதி நிறுவனத்தில் 12 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். இதன் பிறகு மாத தவணைத் தொகையை ஒழுங்காக செலுத்தவில்லை. இதனால் நிதி நிறுவன ஊழியரான குனநிதி(36) என்பவர் குணா வீட்டிற்கு சென்று தவணை தொகையை ஒழுங்காக செலுத்துமாறு அறிவுறுத்தி வந்திருக்கிறார்.
இதன் பிறகும் கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் இழுத்தடித்திருக்கிறார் குணா. இதனால் ஆத்திரமடைந்த நிதி நிறுவன ஊழியர் குனநிதி தனது நிதி நிறுவன ஆட்களை அழைத்துச் சென்று குணா வீட்டில் இல்லாத போது அவரது வீட்டுப் பெண்களை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த குணா, நிதி நிறுவன அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த குனநிதியிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: அட கொடுமையே... செல்போனை பிடுங்கியாதால் ஆத்திரம்.!! ஆசிரியருக்கு கத்திக்குத்து.!!
மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குனநிதியை குத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த குனநிதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குணாவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: "அம்மாவ தப்பா பேசுவியா நீ..' 75 வயது முதியவர் கொடூர கொலை.!! பரபரப்பு பின்னணி.!!