×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்.! வேறொருவருடன் திருமணம்.! தாலியை கழட்டிய கணவன்.! அதிர்ச்சி சம்பவம்

சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்.! வேறொருவருடன் திருமணம்.! தாலியை கழட்டிய கணவன்.! அதிர்ச்சி சம்பவம்

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் மேலத்தெருவை சேர்ந்த குமார் என்ற முதியவர் சிறுமி உள்பட பலரைமில் வேலைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது. அங்கு குமார் 17 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியை ஆறுமுகம் என்பவர் திருமணம் செய்துள்ளார். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த ஆறுமுகம் சிறுமி கழுத்தில் கட்டி இருந்த தாலியை கழட்டி கொண்டு சிறுமியை அவருடைய தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

பெற்றோர் வீட்டுக்கு சென்ற சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் சிறுமியை மருத்துவனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த ஆறுமுகத்தை கைது செய்தனர். இதனையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய குமாரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த குமாரை நேற்று முன்தினம் போலீசார் பிடித்தனர். பின்னர் அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#old man #abused #young girl #pregnant
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story