19 வயது இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய 70 வயது முதியவர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். 70 வயது நிரம்பிய இவர்,
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். 70 வயது நிரம்பிய இவர், குடும்பத்தினர் அனைவருடனும் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். இந்தநிலையில் முதியவர் பன்னீர்செல்வம், 19 வயது இளம்பெண்ணை மிரட்டி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்த இளம்பெண்ணிடம் உங்கள் குடும்பத்துக்கே நான்தான் சோறு போடுகிறேன் என கூறி மிரட்டி வந்துள்ளார்.
திடீரென அந்த இளம்பெண் கர்பமடைந்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண்ணின் தாய் தனது மகளிடம் விசாரித்தபோது. முதியவர் பன்னிர்செல்வம் தன்னிடம் நடந்துகொண்டவற்றை கூறியுள்ளார். இதனைக்கேட்டு பேரதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தாய், இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பன்னீர்செல்வம், இளம்பெண்ணை மிரட்டி கர்ப்பமாக்கியது உறுதியானது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் பன்னீர்செல்வத்தை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362