×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தூங்கி கொண்டிருந்த மூதாட்டியை கொடூரமாக பலாத்காரம் செய்த போதை ஆசாமி! ரத்தவெள்ளத்தில் கிடந்த சடலம்!! 

தூங்கி கொண்டிருந்த மூதாட்டியை கொடூரமாக பலாத்காரம் செய்த போதை ஆசாமி! ரத்தவெள்ளத்தில் கிடந்த சடலம்!! 

Advertisement

துரையில் உள்ள திருநகர் பேருந்து நிலையத்தின் பக்கத்தில் மூதாட்டி ஒருவரின் உடல் இறந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றினர். அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

பின்னர் இது குறித்து அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை பார்த்த போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட பைக் திருடன் அலெக்ஸ் என்பவரை கைது செய்துள்ளது. இவர் ஏற்கனவே பல திருட்டு வழக்கில் கைதாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் சம்பவ தினத்தன்று தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை போதையுடன் வந்த அலெக்ஸ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் பக்கத்தில் இருந்த கல்லை எடுத்து மூதாட்டியின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த காதணிகளை திருடி சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அலெக்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sexual assault #madurai #Tamil Spark News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story