×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கடவுளே!! இளைஞரை அடித்தே கொன்ற சிறுவன்.. வந்தவாசி அருகே பரபரப்பு..!

அடக்கடவுளே!! இளைஞரை அடித்துக் கொன்ற சிறுவன்.. வந்தவாசி அருகே பரபரப்பு..!

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விழுதுபட்டு பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது மகன் சக்திவேலுக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இடையே தொடர் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சக்திவேல் அவரது கிராமத்தில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அந்த சிறுவனும் அங்கு மீன் பிடிக்க வந்துள்ளார். இதில் இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் அங்கு இருந்த கட்டையால் சக்திவேலை கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சக்திவேலின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலையாளியான அந்த சிறுவனை கைது செய்துள்ள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#killed #Youth #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story