அட பாவமே!! தங்கையை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் பலி.. எமன் ரூபத்தில் வந்த பேருந்து..!
அட பாவமே!! தங்கையை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் பலி.. எமன் ரூபத்தில் வந்த பேருந்து..!
திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் வசித்து வருபவர் ஜெயபால். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஜெயபால் கல்லூரியில் படித்து வரும் தனது இளைய மகளை பார்ப்பதற்காக தனது மூத்த மகளான மகராசியை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இதனையடுத்து ஆரல்வாய்மொழி பகுதியில் அவர்கள் வந்தபோது அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் தங்களது இருசக்கர வாகனத்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு இருவரும் டீ குடித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த ஜெயபால் மகராசி மீது அதிவேகமாக மோதியது. இதில் மகராசி பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் ஜெயபால் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மகராசியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362