×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரூ.2,50,000 சம்பளத்துடன் இங்கிலாந்தில் செவிலியர் வேலை... தமிழக அரசின் அயல்நாடு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு..!!

ரூ.2,50,000 சம்பளத்துடன் இங்கிலாந்தில் செவிலியர் வேலை... தமிழக அரசின் அயல்நாடு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு..!!

Advertisement

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தமிழக அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனம் என்பதால் எந்த ஒரு இடைத்தரகரோ, ஏஜெண்டுகளோ இல்லை.

இங்கிலாந்து நாட்டில் வேலை செய்ய ஆண் மற்றும்  பெண் செவிலியர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் அயல்நாடு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும்
நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இங்கிலாந்து நாட்டில் நர்ஸ் வேலைக்கு Diploma (Nursing) அல்லது B.Sc (Nursing) degree படித்த குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவமும் OET/IELTS பரீட்சையில் தேர்ச்சிப் பெற்ற ஆண் மற்றும் பெண் நர்ஸ்கள் தேவை. இப்பணிக்கு மாத சம்பளம் ரூ.2,00,000/- முதல் 2,50,000/- வரை வழங்கப்படும்

எனவே இந்த வேலைக்கு தகுதியானவர்கள் தங்கள் விவரத்தை வெளிநாட்டு வேலை வழங்குவோருக்குத் தெரிவிக்கும் பொருட்டு, OET (Oocupational English Test) பயிற்சியில் Grade B மற்றும் அதற்குமேல் தேர்ச்சிப்பெற்றவர்களும், IELTS (Interniational English Language Testing. Systern) பயிற்சியில் Band 7.0 மற்றும் அதற்கு மேல்  தேர்ச்சிப்பெற்றவர்களும் omcmanpower.com/registration.php என்ற இணையதள பக்கத்தில் பதிவுசெய்ய வேண்டும்.

மேலும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தமிழக அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனம் எனவே நிறுவனத்தின் கீழ் எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்டுகளோ இல்லை. ஆகவே, விருப்பம் இருப்பவர்கள் நேரடியாக இந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #England #Employment recruitment #Bsc diploma #Staff nurses #Both male and female
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story