×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆபாச புகைப்படத்தை வைத்து மிரட்டி மாணவி பலகாரம்.. 18 பேர் கைது!

ஆபாச புகைப்படத்தை வைத்து மிரட்டி மாணவி பலகாரம்.. 18 பேர் கைது!

Advertisement

கேரளா மாநிலத்தில் மாணவியின் ஆபாச புகைப்படத்தை வைத்து மிரட்டி 18 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பட்டினம் திட்டம் அருகே உள்ள சிற்றார் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். நாளடைவில் இந்தப் பழக்கம் நெருக்கமான நிலையில், ஒருவருக்கொருவர் தங்களது நிர்வாண புகைப்படங்களை பரிமாறிக் கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளைஞர் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் அந்த புகைப்படங்களை தனது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து அந்த இளைஞரின் நண்பர்களும் மாணவியை மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். நாளுக்கு நாள் அவர்களது தொல்லை அதிகரித்ததால் மாணவி பயந்து பள்ளிக்கு செல்லவில்லை. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் மனநிலை பரிசோதனைக்காக குழந்தைகள் நல அமைப்பினரிடம் அழைத்துச் சென்றனர்.

அவர்கள் மாணவி இடம் நடத்திய விசாரணையில் எந்த சம்பவம் வெளியே வந்துள்ளது. இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்பினர் பத்தின போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

இதில், மாணவியுடன் ஒன்றாக படிக்கும் மாணவர்கள் உட்பட 18 பேர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#harassment #Rapped #arrest #Crime #KERALA
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story