×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போலீசாரை சரமாரியாக தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்..! 7 போலீசார் மருத்துவமனையில் அனுமதி.! என்ன காரணம்.?

போலீசாரை சரமாரியாக தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்..! 7 போலீசார் மருத்துவமனையில் அனுமதி.! என்ன காரணம்.?

Advertisement

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே செயல்பட்டு வரும் பிரபல தனியார் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வடமாநில இளைஞர் ஒருவர் நேற்று இரவு பணியாற்றிக் கொண்டிருந்தபோது விபத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்காக முயன்றனர். அப்போது அங்கு பணியாற்றும் சக வடமாநில இளைஞர்கள் அவரது உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து உயிரிழந்த வட மாநில இளைஞருக்கு காப்பீடு தொகை பெற்றுக் கொடுப்பதாக நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். ஆனால் முழு தொகையையும் உடனடியாக செலுத்தும்படி கேட்டுள்ளனர். ஆனால் அதனை தர மறுத்து இறந்தவரை ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு  கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர்.

அப்போது ஆத்திரமடைந்த வடமாநில இளைஞர்கள், அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். தடுக்க வந்த போலீசாரையும் கடுமையாக தாக்கினர். இதில் 7 போலீசார் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 300க்கும் மேற்பட்ட காவலர்களை அனுப்பி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#north indians #police #attacked
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story