×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நித்தியானந்தாவாக மாறிய சிவன் சிலை.! அதிர்ச்சியில் பக்தர்கள்.!

நித்தியானந்தாவாக மாறிய சிவன் சிலை.! அதிர்ச்சியில் பக்தர்கள்.!

Advertisement

புதுச்சேரி மாநிலம் குருமாம்பேட் அருகே உள்ள பெரம்பையில் நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசியாவில் உள்ள முருகன் கோவில் போலவே இங்கு ஒரு கோவிலைக் கட்டி வந்தார்.

இந்த கோவிலில் 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலயம் என பெயரிடப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கோவிலின்  நுழைவு வாயிலில் 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை காணப்பட்டது. இந்த சிலைக்கும் நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த சிலையை பார்த்ததும் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இதுகுறித்து கோவில் கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியார்களிடம் கேட்ட பொழுது இது சிவனின் மற்றொரு அவதாரமான கால பைரவர். மேலும், ஸ்தபதி சிலையை முறையாக வடிவமைக்காததால் இப்படி உள்ளது என்று கூறினர்.

 இதனையடுத்து, கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் அறைக்கு சென்று பார்த்த போது. அவர் அறை முழுவதும் நித்தியானந்தா அவருக்கு ஆசி வழங்குவதும், நித்தியானந்தா புகைப்படத்தை ஓவியமாக திட்டி வைத்திருப்பதும் போன்ற புகைப்படங்கள் இருந்தது. மேலும், அவர் நித்தியானந்தா படங்களை வைத்து பூஜை செய்து வந்ததும் தெரியவந்தது.

 இந்த நிலையில்  அங்கு நடந்த கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த  பக்தர்களும் அந்த சிலையின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இவ்வாறு நித்தியானந்தா சீடர் முருகன் கோயில் கட்டி, அங்கு 18 அடியில் நித்தியானந்தா சிலையை நிறுவி கும்பாபிஷேகம் செய்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nithiyanandha #statue
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story