×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலியை கொன்று, தண்ணீர் தொட்டிக்குள் வீசிய காதலன்.. நீலகிரியில் பேரதிர்ச்சி.!

காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலியை கொன்று, தண்ணீர் தொட்டிக்குள் வீசிய காதலன்.. நீலகிரியில் பேரதிர்ச்சி.!

Advertisement

 

நீலகிரி மாவட்டத்திலுள்ள மஞ்சூர், எடக்காடு பாதகண்டி பகுதியில் வசித்து வருபவர் ராமநாதன். இவரது மனைவி கல்யாணி. தம்பதிகளுக்கு பவித்ரா என்ற மகளும், 23 வயதுடைய விசித்திரா என்ற மகளும் என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். 

இவர்களில் பவித்ரா திருமணமாகி வெளியூரில் வசித்து வரும் நிலையில், விசித்ரா பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். தற்போது வீட்டிலேயே அவர் இருந்து வரும் நிலையில், பெற்றோர் திருமணத்திற்கு வரன் பார்த்துள்ளனர். இதனிடையே கடந்த ஒன்றாம் தேதி விசித்ரா மாயமான நிலையில், அவரைத் தேடி வந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விசித்ரா பாதகண்டி கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பின் விசாரணை நடத்தி வந்தனர். 

விசித்திராவின் கழுத்தில் காயங்களும் இருந்துள்ள காரணத்தால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. சந்தேகத்தின் வலையில் மஞ்சூர் சிவசக்தி நகர் பகுதியில் சேர்ந்த 23 வயதுடைய ஜெயசீலன் என்பவர் சிக்கினார். அவரிடம் விசாரித்ததில், விசித்திராவும் - ஜெயசீலனும் காதல் செய்து வந்த நிலையில், திருமணத்திற்கு மறுத்ததால் கொலை நடந்தது அம்பலமானது. 

ஜெயசீலனும் - விசித்திராவும் பள்ளியில் ஒன்றாக படித்து, பின் அறிமுகம் ஏற்பட்டு கல்லூரிக்குச் சென்றபோது நண்பர்களாகி காதலித்து வந்துள்ளனர். பின்னாளில் ஜெயசீலனின் நடவடிக்கை சரியில்லாததால் அவரிடமிருந்து விசித்திரா விலக தொடங்கவே, அவருக்கு பெற்றோர் வேறு இடத்தில் வரனும் பார்த்து வந்துள்ளனர். 

இந்த தகவல் அறிந்த ஜெயசீலன் காதலியை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் இல்லை. கடந்த ஒன்றாம் தேதி நேரடியாக வீட்டிற்கு சென்ற ஜெயசீலன், தனியாக பேச வேண்டும் என்று அழைத்துச் சென்று கொடூரத்தை அரங்கேற்றியது அம்பலமானது. பின் விசித்ராவின் சடலத்தை கிராமத்திற்கு தண்ணீர் வழங்கும் குடிநீர் தொட்டியில் போட்டு சென்றுள்ளார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nilgiris #Manjur #tamilnadu #Murder #Love
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story