×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தேம்பித் தேம்பி அழுத நீலகிரி மாவட்ட ஆட்சியர்.. முதியோர் இல்லத்தில் நடந்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்..!

தேம்பித் தேம்பி அழுத நீலகிரி மாவட்ட ஆட்சியர்.. முதியோர் இல்லத்தில் நடந்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்..!

Advertisement

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள முதியோர் இல்லத்தில் முதியோர் தினத்தை கொண்டாடும் விதமாக நூறு வயது கடந்தவர்களை கௌரவிக்க நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது தங்களது பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் தங்களது கவலைகளை மறந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆடிப்பாடியதைக் கண்டு மாவட்ட ஆட்சியர் அருணா கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். மேலும் மாவட்ட ஆட்சியருடன் உடன் வந்தவர்களும் இதனைக் கண்டு கண் கலங்கினர்.

பின்னர் அங்கிருந்த முதியவர்களோடு நேரம் செலவிட்ட மாவட்ட ஆட்சியர் அருணா அவர்களுக்கு சால்வை அணிவித்து புத்தாடைகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி ஆசீர் பெற்றார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#collector #Cried #Old age home
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story