×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பி மகள்! இரவில் தனியா போகாதே என கூறிய தந்தை! மகள் எடுத்த விபரீத முடிவு.

Nilakiri priya

Advertisement

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கூலி தொழில் செய்து வசித்து வருபவர் சுந்தர்ராஜ். இவரின் மகள் பிரியா(24) துபாயில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். 

மேலும் இவர் சில தினங்களுக்கு முன்பு தான் துபாயிலிருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.இந்நிலையில் துபாயில் இருக்கும் போது தன்னுடன் வேலை பார்த்த தோழியின் தந்தை இறந்ததாக பிரியாவுக்கு தகவல் வந்துள்ளது.

அதனை அடுத்து பிரியா சென்னையில் நடைப்பெறவுள்ள தோழியின் தந்தை இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள தனது தந்தையிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் பிரியாவின் தந்தை இரவில் தனியாக இவ்வளவு தூரம் போக வேண்டாம் என கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த பிரியா விஷம் குடித்துள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nilakiri #priya
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story