கடை திறப்புக்கு வந்த பிரபல நடிகை, தடியடி நடத்தி விரட்டிய போலீசார்.! ஏன் தெரியுமா?
கடை திறப்புக்கு வந்த பிரபல நடிகை, தடியடி நடத்தி விரட்டிய போலீசார்.! ஏன் தெரியுமா?
செல்போன் கடை திறப்பு விழாவிற்கு பிரபல நடிகை நிக்கி கல்ராணியை காண அவரது ரசிகர் கூட்டம் குவிந்ததால் கட்டுபடுத்த முடியாமல் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
திருப்பூர் நகரில் குமரன் சாலையில் புதிதாக ஒரு செல்போன் கடை ஒன்று நேற்று திறக்கப்பட்டது. இந்த கடையை நடிகை நிக்கி கல்ராணி திறந்து வைத்தார். மேலும் அந்த கடையில் முதல் 200 வாடிக்கையாளர்களுக்கு 1000 ருபாய் மதிப்புடைய செல்போனை, வெறும் 200 ரூபாய் விலைக்கு கொடுப்பதாக கடையின் நிர்வாகம் அதிரடி சலுகையாக அறிவித்தது.
மேலும் செல்போன் கடையின் திறப்பு விழாவுக்கு, நடிகை நிக்கி கல்ராணி வருகை தருவதாகவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவரது ரசிகர்கள் அந்த கடையின் முன் குவிந்தனர்.
மேலும் சலுகையில் காரணமாகவும் கடையில் கூட்டம் அதிகரித்தது.
இவ்வாறு ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து தள்ளுமுள்ளு ஏற்படவே, போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர் . இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362