தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணமான ஒரே வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு நிகழ்ந்த சோகம்... கதறும் குடும்பத்தினர்!!

அடக்கடவுளே!! புது மாப்பிள்ளை உயிரிழப்பு... திருமணமான ஒரே வாரத்தில் நிகழ்ந்த சோகம்..!

newlywed-dies-within-a-week-of-marriage Advertisement

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே ஆனைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மகன் கலையரசன். கலையரசன் கடையநல்லூர் பகுதியில் உள்ள வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் வங்கி பணிக்காக தனது பைக்கில் வேலைக்கு சென்றுள்ளார். சுரண்டை சாம்பவர் வடகரை சாலையில் கலையரசன் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் கலையரசன் பைக்கின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்தார் கலையரசன்.

accident

காயமடைந்த கலையரசனை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் மீட்டு அனுப்பி வைத்தனர். பின்பு முதல் உதவி செய்யப்பட்ட பின் அங்கிருந்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் கலையரசனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் மோசமாகி கொண்டே வந்ததால் உயர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கலையரசன் உயிரிழந்தார். திருமணமான ஒரே வாரத்தில் புது மாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #died #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story