×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொடுமை... திருமணமான 8 நாளில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்.?

கொடுமை... திருமணமான 8 நாளில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம் ..... நடந்தது என்ன?

Advertisement

கடலூர் மாவட்டத்தில் திருமணமான 8 நாட்களில் புது மாப்பிள்ளை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் கெங்கநாயக்கன்குப்பம்  பகுதியைச் சேர்ந்தவர் விமல் ராஜ் இவருக்கு வயது 25.  இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பைபர் கேபிள் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் இவருக்கும் பிரவீனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமண சடங்குகள் எல்லாம் முடிந்து நேற்று பணிக்கு திரும்பி இருக்கிறார் விமல் ராஜ். இந்நிலையில் நேற்று திருப்பாதிபுலியூர்  என்ற பகுதியில் ஒரு வீட்டில் செல்போன் இணையதள கேபிலை சரி செய்து கொண்டிருந்த போது  மேலே சென்ற மின்சார கம்பியில் எதிர்பாராத விதமாக அவரது கைப்பற்றி மின்சாரம் தாக்கி இருக்கிறது. இதில் தூக்கி வீசப்பட்ட விமல் ராஜ் ஐ அருகில் இருந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக  காவல்துறை அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். திருமணமான 8 நாட்களில் புது மாப்பிள்ளை மின்சாரம் தாக்கிப்படியான சம்பவம் அப்போகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #kadalur #nwgroom #electricshock #policeenquiry
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story