×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சோகம்... சுற்றுலா வந்த புது பெண் பலி... சப் கலெக்டர் விசாரணை.!

சோகம்... சுற்றுலா வந்த புது பெண் பலி... சப் கலெக்டர் விசாரணை.!

Advertisement

கரூர் மாவட்டத்தைச் சார்ந்த புதுப் பெண் கன்னியாகுமரி ஹோட்டலில் உணவு அருந்திய போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்பவருக்கு  கிருபா (25)  என்ற பெண்ணுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் சுற்றுலா விற்காக கன்னியாகுமரிக்கு வந்திருக்கின்றனர்.

அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்தபோது கிருபாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கான மாத்திரைகளை அவர் எடுத்துக் கொண்ட போதும் மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கொலை செய்கிற மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றனர். அங்கு கிருபா பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமணமான மூன்று மாதங்களிலேயே ஹோட்டலில் உணவு அருந்தும் போது இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சப் கலெக்டர் விசாரணை நடத்தினார். மேலும் காவல்துறையினரும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே மூச்சு திணறல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Karur #kanyakumari #womandied #subcollectorinvestigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story