×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணம் முடிந்த நிலையில் மணப்பெண்ணின் தங்கையை புகைப்படம் எடுத்ததால் நேர்ந்த சோகம்!.

திருமணம் முடிந்த நிலையில் மணப்பெண்ணின் தங்கையை புகைப்படம் எடுத்ததால் நேர்ந்த சோகம்!.

Advertisement

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி பகுதியை சேர்ந்த செந்தில்வேலுக்கும், சென்னையை சேர்ந்த  ஈஸ்வரிக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து நரிக்குடி அருகே பிள்ளையார்குளத்தில் உள்ள மணமகளின் தாய்மாமன் முருகவேல் என்பவரின் வீட்டிற்கு மணமக்கள் இரவு உணவு விருந்துக்கு சென்றுள்ளனர்.

அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த 7 இளைஞர்கள் மணப்பெண்ணின் தங்கையை செல்போனில் படம் எடுத்துள்ளனர். அதை பார்த்த முருகவேல் ஆத்திரத்தில் அவர்களை தடுத்து கண்டித்துள்ளார்.இதனால் இருதரப்பினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் 7 பெரும் முருகவேலை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த முருகவேல், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் முன்னதாகவே அவர் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறினார்கள்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#newly married #photos #Murder
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story