×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம்.! தமிழக அரசு அதிரடி.!

New law to eradicate rowdies

Advertisement

ரவுடிகளையும் சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். அதேபோல் தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு ரவுடி கும்பல்கள் குறித்த விவரங்களையும், அவர்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை குறித்தும் விளக்கமளிக்க டி.ஜி.பி.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேபோல் தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்கச் சென்றபோது வெடி குண்டு வீசப்பட்டதால் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியனின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இந்தநிலையில், ரவுடிகளால் போலீஸ் தாக்கப்படுவது வருத்தமளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசியல் கட்சிகளும் இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு முன் நின்று உதவ வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#new law #eradicate rowdies
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story