×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உருவானது புதிய ஃபனி புயல்; தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை.!

new cyclone -Fani Cyclone - bay of bengal - indian osean

Advertisement

தமிழகத்தில் இம்மாத துவக்கத்தில் இருந்து சுட்டெரிக்கும் வெயில் ஆனது மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக உள் மாவட்டங்கள் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியப் பெருங்கடல்-வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருந்ததாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அடுத்த 36 மணி நேரத்தில் அது புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழகத்தில் 30 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

அவ்வாறு கரையை கடக்கும்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது உருவாகியுள்ள புதிய புயலுக்கு  ஃபனி புயல் (Fani Cyclone) என்று பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக கிடைத்த தகவலின்படி உருவாகியுள்ள புதிய புயலின் காரணமாக கன்னியாகுமரியில் கடல் சீற்றம் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vanilai #cyclone in bay of bengal #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story