×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நான்கு மாதத்தில் கசந்த காதல்!.. இளம் பெண் எடுத்த முடிவால் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..!

நான்கு மாதத்தில் கசந்த காதல்!.. இளம் பெண் எடுத்த முடிவால் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..!

Advertisement

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகேயுள்ள அகூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (20). இவர் அதே பகுதியிலுள்ள செருக்கனுர் கிராமத்தை சேர்ந்த மாலினி (18) என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு மாலினியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ,கடந்த 4 மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய மாலினி, தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து காதல் தம்பதியின அகூர் கிராமத்தில் உள்ள விக்னேஷ் வீட்டில் வசித்து வந்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக தம்பதியினரிடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த மாலினி, வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விக்னேஷின் உறவினர்கள், சம்பவம் குறித்து திருத்தணி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 4 மாதங்கள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருமணமாகிய 4 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அகூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tiruttani #young girl #Commits Suicide #New Bride #police investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story