சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்துகிடந்த நெதர்லாந்து இளம்பெண்!!
சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்துகிடந்த நெதர்லாந்து இளம்பெண்!!
சென்னை தி.நகர், வெங்கடேசன் தெருவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கடந்த 27-ம் தேதி முதல் நெதர்லாந்தைச் சேர்ந்த லிண்டா என்ற 24 வயது இளம்பெண் தங்கி வந்துள்ளார். அவர், 30-ம் தேதி அறையை காலிச் செய்வதாக ஹோட்டல் ஊழியர்களிடம் கூறியிருந்தார். ஆனால், அவர் சொன்ன தேதியில் அறையை காலி செய்யவில்லை.
அவர் தங்கியிருந்த அறையின் கதவும் நேற்று முழுவதும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த ஊழியர்கள் இதுகுறித்து மாம்பலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள், அறையின் கதவை மாற்றுச் சாவி மூலம் திறக்க முயன்றனர். ஆனால், கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்ததனால் கதவை உடைத்து போலீஸார் மற்றும் ஊழியர்கள் உள்ளே சென்றனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அப்போது லிண்டா படுக்கையறையில் தூங்குவதை போலவே படுத்திருந்தார். உடனே அவர், தூங்குகிறார் என்று கருதிய போலீஸார் மற்றும் ஊழியர்கள் அவரை எழுப்ப முயற்சித்துள்ளனர். ஆனால், அவர் கண்விழிக்கவில்லை.
இந்தச் சமயத்தில் அவர் படுத்திருந்த படுக்கையின் அருகே ஒரு விதமான பவுடர் சிதறிக்கிடந்துள்ளது. அதை போலீஸாரும் ஹோட்டல் ஊழியர்களும் பார்த்தனர். இதையடுத்தே அவர்கள் விபரீதத்தைப் புரிந்துகொண்டனர். தொடர்ந்து லிண்டாவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.
இதையடுத்து லிண்டாவின் உடல், சென்னை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. தொடர்ந்து நெதர்லாந்து தூதரகம் சென்னையில் இல்லாததால் டெல்லியில்உள்ள நெதர்லாந்து தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் லிண்டா என்ற நெதர்லாந்து இளம்பெண், தன்னை ரிப்போர்ட்டர் என்று அறிமுகம் செய்துள்ளார். கடந்த நான்கு நாள்கள் அவர் அங்கு தங்கியிருந்துள்ளார். அவரைச் சந்திக்க சிலர் வந்துள்ளனர். அறையை காலி செய்வதாகக் கூறிய நாளில்தான் அவர் படுக்கையறையில் இறந்துகிடந்துள்ளார். அவர் தற்கொலை செய்திருக்கத்தான் அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர், தங்கியிருந்த அறையின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் பிரேதப் பரிசோதனை முடிவில்தான் லிண்டாவின் மரணத்துக்கான காரணம் தெரியவரும். மேலும் லிண்டா குறித்து எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை. நெதர்லாந்தில் உள்ள அவரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் வந்தப்பிறகுதான் முழு விவரம் தெரியவரும் என்று கூறியுள்ளனர்.
மேலும் லிண்டாவின் விசா காலம் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைவதாக தெரிகிறது. இந்தச் சமயத்தில்தான் லிண்டா இறந்துள்ளார். சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் நேரத்தில் அவர் ஏன் இறந்தார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். லிண்டாவைச் சந்திக்க வாலிபர் ஒருவர் வந்துள்ளதாக சிசிடிவி கேமரா பதிவு மூலம் தகவல் கிடைத்துள்ளது. அவர் யார் என்று பொலிஸார் விசாரித்து வருகிறார்கள்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362