×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நெல்லை : கோயில் திருவிழாவில் தகராறு.. தொழிலதிபர் ஓட ஓட வெட்டி படுகொலை.!

நெல்லை : கோயில் திருவிழாவில் தகராறு.. தொழிலதிபர் ஓட ஓட வெட்டி படுகொலை.!

Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் குமார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் மகன்கள் உள்ளனர். இவர் ஜேசிபி, லாரி போன்றவற்றை வைத்து பிசினஸ் செய்து வருகிறார்.

எந்த நிலையில் வீரவநல்லூரில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த ஒரு வாரமாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதிக்கும் நிகழ்வு நாளை நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் குமார் தரப்பை சேர்ந்த மண்டகப்படி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது பட்டாசு வெடிக்கும் போது அதே தரப்பை சேர்ந்த சிலருக்கும், குமார் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு மோதலாகியுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை வீரவநல்லூர் ரயில் நிலையம் அருகே உள்ள குளத்திற்கு குமார் சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து சென்ற, 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட ஓட துரத்தி வெட்டி படுகொலை செய்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரவநல்லூர் போலீசார் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலைகாரனை காரணம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thirunelveli #Veeravanallur #Festival fight #Draupadi temple festival #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story