×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அலட்சியம்.. வீட்டிலே நடந்த பிரசவத்தால் பெண் பலி.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.!

அலட்சியம்.. வீட்டிலே நடந்த பிரசவத்தால் பெண் பலி.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.!

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாவடியூர் பகுதியில் வசித்து வந்தவர்கள் ரமேஷ் - ஹேமலதா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

 இந்நிலையில் ஹேமலதா மீண்டும் கருத்தரித்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த ஹேமலதாவிற்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஹேமலதாவை அருகில் இருந்த சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக அவரது கணவர் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது ஹேமலதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரசவ வலி வந்து விட்டதாகவும் குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் கூறி மருத்துவமனையில் சேர்க்குமாறு தெரிவித்துள்ளனர். ஆனால் ஹேமலதாவின் கணவர் அவரை மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு சென்ற ஹேமலதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும் அவரது உடல்நிலை குழந்தை பிறந்த பிறகு மிகவும் மோசமாகி உள்ளது. இதனையடுத்து ஹேமலதாவை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்று உள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஹேமலதா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#women died #Childbirth at home #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story