தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பணியை முடித்துவிட்டு வந்த பெண் காவலர் சாலை விபத்தில் பலி; நாமக்கல்லில் சோகம்.!

பணியை முடித்துவிட்டு வந்த பெண் காவலர் சாலை விபத்தில் பலி; நாமக்கல்லில் சோகம்.!

Namakkal Rasipuram NH Cop Died In Accident  Advertisement

 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் - ஈச்சர் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பெண் தலைமைக் காவலர் அமுதா (வயது 39) பரிதாபமாக உயிரிழந்தார். 

இவர் எளையம்பாளையம் பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் இரவுநேர பணிக்கு சென்றுவிட்டு, பின் மீண்டும் ராசிபுரம் நோக்கி வரும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்து இருக்கிறார். இந்த வ்விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். 

காவலரின் உடல் அதிகாரிகளால் மீட்கப்பட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நேரில் சென்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர், மறைந்த காவலருக்கு மலர் வளையம் வைத்து தங்களின் அஞ்சலியை செலுத்தினர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#namakkal #tamilnadu #Rasipuram #accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story