தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை விவகாரத்தில் பேரதிர்ச்சி திருப்பம்.. போதை தவளை வாயால் கெட்டு மரணித்த சோகம்.!

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை விவகாரத்தில் பேரதிர்ச்சி திருப்பம்.. போதை தவளை வாயால் கெட்டு மரணித்த சோகம்.!

Namakkal Land Broker Murder Case Advertisement

குடிபோதையில் ரியல் எஸ்டேட் அதிபர் வம்பிழுத்ததால், இளைஞர் அவரின் கழுத்தில் குத்தி கொலை செய்து தலைமறைவான சம்பவம் நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள ஜெய் நகரை சார்ந்தவர் குமரேசன் (வயது 48). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 18-ம் தேதி குமரேசன் தனது நண்பர்களுடன் சேந்தமங்கலம் அரசு மதுபானக்கடையில் குடித்துவிட்டு நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார். இடையில், பழைய நீதிமன்ற வளாகம் அருகே காரை நிறுத்திய சமயத்தில், அங்கு வந்த மர்ம நபர் குமரேசனின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். 

உயிருக்கு துடித்த குமரேசனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குமரேசன் 19-ம் தேதி அதிகாலையில் உயிரிழந்தார். இந்த விஷயம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குமரேசனின் மனைவி துர்கா மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திடீர் போராட்டம் நடத்தினர். 

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலையாளிகளை கைது செய்வதாக உறுதியளித்து வழக்குப்பதிவு செய்ததால் குமரேசனின் உடலை உறவினர்கள் பெற்று சென்றனர். இந்த விஷயம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்தது. 

namakkal

விசாரணையில், குமரேசனை கொலை செய்தது நாமக்கல் மாவட்டம் ஜெய் நகரில் வசித்து வரும் பெயிண்டர் நவீன் (வயது 22) என்பது உறுதியானதால், தலைமறைவாக இருந்த நவீன் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடந்த விசாரணையில், சம்பவ நாளில் குமரேசன் போதையில் பழைய நீதிமன்ற வளங்கம் அருகே இருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக சென்ற நவீனிடம் சம்பந்தமே இல்லாமல் சத்தமிட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த நவீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குமரேசனை படுகொலை செய்துள்ளார். கழுத்தில் குத்தியதில் குமரேசனின் உயிர் ஊசலாடி இறுதியில் மருத்துவமனையில் பிரிந்துள்ளது. இதனையடுத்து, நவீனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைந்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#namakkal #Land Broker #tamilnadu #Murder #police #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story