×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மழைநீர் குட்டையில் குரைத்துக்கொண்டு இருந்த நாய்.. 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான பரிதாபம்.. தமிழகமே சோகம்.!

மழைநீர் குட்டையில் குரைத்துக்கொண்டு இருந்த நாய்.. 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான பரிதாபம்.. தமிழகமே சோகம்.!

Advertisement

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அத்திபலகானூர் கிராமத்தில் வசித்து வரும் சிறுமிகள் ஜனனி, ரத்னா ஸ்ரீ (வயது 15). இவர்கள் இருவரும் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்கள். 

இப்பகுதியில் மழைநீர் குட்டை ஒன்று உள்ளது. இந்நிலையில், இன்று இருவரும் மழை நீர் குட்டைக்குச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அதில் மூழ்கி தத்தளித்ததாக தெரிய வருகிறது. 

இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பெற்றோர் மகள்களை காணாது தேடியலைந்த நிலையில், குட்டை அருகே நாய் குரைத்துக்கொண்டே இருப்பதை கேட்டு உடல் தேடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nammakal district #school students #dead #accidentally death #police invesigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story