×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்மப்பை..! பீதியடைந்த பயணிகள்..! பைக்குள் என்ன இருந்தது தெரியுமா..?

Mysteries bag found in chennai airport

Advertisement

சென்னை விமானநிலையத்தில் கிடந்த மர்மப்பையால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் நீண்ட நேரமாக பை ஓன்று கிடந்துள்ளது. நீண்ட நேரமாகியும் அந்த பையை யாரும் எடுத்து செல்லாததால் சந்தேகமடைந்த துப்புரவு தொழிலார்கள் இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தனர்.

இதனை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மூலம் அதிகாரிகள் சோதனை செய்ததில் அந்த பை உள்ளே சில துணிகள், உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில் இருந்துள்ளது. பின்னர் அந்த பை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு மங்களூரு விமான நிலையத்தில் இதேபோன்று கிடந்த மர்மப்பையில் வெடிகுண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையிலும் அதுபோன்று கிடந்த மர்மபையால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Unknown bag #airport
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story