×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தங்கையுடன் ஏற்பட்ட கள்ள காதல்!. பலமுறை எச்சரித்தும் விடாமல் அனுபவித்த உறவு!.

mureder for illegal affairs

Advertisement


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் மீனாட்சிசுந்தரம். இவரது மனைவி அமுதா. இவர்களது மகன் பிரேம்குமார் அப்பகுதியில் லேத் பட்டறை நடத்தி வந்துள்ளார்.

பிரேம்குமாருக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின்னர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவர் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடரப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் பிரேம்குமாரின் வீட்டில் அவரின் தாய்மாமன் மகன் பிரகாஷ் தன் மனைவி சூர்யாவுடன் வசித்து வந்துள்ளார். ஒரே வீட்டில் இருந்ததால் பிரேம்குமாரும், சூர்யாவும் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு இவர்கள் பல முறை தனியாக உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது சூர்யா உறவுமுறையில் தங்கை முறை என்று கொஞ்சம் கூட உணராமல் இவ்வாறு நடந்துள்ளனர்.


இந்த தகவல் இரண்டு பேரின் குடும்பத்தாருக்கும் தெரியவந்ததால், அவர்கள் கண்டித்துள்ளனர். பிரகாஷ் 3 மாதத்திற்கு முன்பு மனைவியுடன் அங்கிருந்து வெளியேறி அருகிலிருக்கும் கருப்பாயூரணி உருக்கு சென்று விட்டார். 

ஆனாலும் தொடர்ந்து சூர்யாவுடன் பிரேம்குமார் தொடர்பு வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் இன்று சகோதரர் பாலனுடன் பிரேம்குமார் இருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், இரண்டு பேரும் அவரை சரமாரியாக வெட்டியதால், அவர் படுக்கையிலே பரிதாபமாக பலியாகினார்.

தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று பிரேம் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய பிரகாஷ் மற்றும் அவரது சகோதரரை தேடி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#illegal affairs #Murder #love affairs
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story