மனைவியின் நடத்தையில் சந்தேகம்.! 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி..!! தந்தை என்ன செய்தார் தெரியுமா..?
மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் பெற்ற குழந்தைக்கு நேர்ந்த கதி..!! கணவன் என்ன செய்தார் தெரியுமா..?
பெற்ற மகளையே, தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் வில்லிவாக்கம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வில்லிவாக்கம் அருகே, செங்குன்றம் சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ராதாகிருஷ்ணன (வயது 34), இவருடைய மனைவி லாவண்யா (32) மற்றும் 7 வயதுடைய மகள் வதனா ஸ்ரீ, 5 வயதுடைய மகன் விக்கி ஆகியோர் தங்கி வசித்து வந்துள்ளனர்.
ராதாகிருஷ்ணன் என்பவர் கட்டிட வேலையும், லாவண்யா வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துமனையிலும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் மனைவி லாவண்யா, அதே பகுதியில் உள்ள வேற ஒரு நபருன் கள்ளத்தொடபில் இருப்பதாக நடத்தையில் சந்தேகம் அடைந்த ராதாகிருஷ்ணன் மனைவியிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்ததால், இருவரும் 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
லாவண்யா தனது இரண்டு குழந்தையுடன் வில்லிவக்கத்தில் உள்ள இதே குடியிருப்பிலும், ராதாகிருஷ்ணன் அயனாவரத்தில் உள்ள அவரது தாய் வீட்டிலும் வசித்து வந்தனர். இதனையடுத்து ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் மனைவி தங்கியிருந்த குடியிருப்பிற்க்கு வந்து, லாவண்யா இல்லாத நேரத்தில் தனது மகளிடம், உன் அம்மா யாருடன் கள்ளத்தொடர்பில் இருக்கிறாள் என்று தன் மகளிடம் கேட்டுள்ளார். மகள் இதைப் பற்றி எதுவும் சொல்லாததால் தன் குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.
பின்னர் இச்சம்பவம் குறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரணை செய்ததில் ராதாகிருஷ்ணன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பிறகு இவரிடம் போலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362