×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சாத்தான்குளத்தில் அதிர்ச்சி சம்பவம்.! ஜாமீனில் வெளிவந்தவர் கொடூரக் கொலை.!

சத்தான் குளத்தில் ஜாமீனில் வெளியே வந்த நபரை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

தூத்துக்குடி மாவட்டடம் சாத்தான்குளம் அருகே பனைக்குளம் பகுதியை சேர்ந்தவர் யோவான். இவர் சமீபத்தில் பனைக்குளத்தை சேர்ந்த பெண் ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். இதனால் காயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக யோவானை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் யோவான். இந்த நிலையில் நேற்று ஊரின் காட்டுப்பகுதியில் அவர் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கழுத்து துண்டாக வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #sathankulam
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story