பாத்ரூமில் குளிக்க சென்ற 27 வயது இளம்பெண் மர்ம மரணம்!
கர்நாடக மூடிகெரே விடுதி குளியலறையில் 27 வயது பெண் மரணம் மர்மம் சூழ, போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது. அனுமதியின்றி இயங்கிய விடுதியும் விசாரணையில் வெளிச்சம் கண்டது.
கர்நாடகத்தில் தங்கும் விடுதி பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகும் நிலையில், மூடிகெரே பகுதியில் ஏற்பட்ட துயரச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசன் மாவட்ட தேவலாபுரா கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா (27), பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து அங்குள்ள விடுதியில் தங்கி வந்தார். சமீபத்தில் தனது தோழி ரேகாவுடன் சிக்கமகளூரில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக மூடிகெரே வந்திருந்தார்.
குளியலறையிலிருந்து வெளியே வராததால் பதற்றம்
அன்றைய காலை ரேகா முதலில் குளித்துவிட்டு வெளியே வந்தார். பின்னர் ரஞ்சிதா குளிக்க சென்றார். ஆனால் நீண்ட நேரம் கடந்தும் வெளியே வராததால் சந்தேகமடைந்த ரேகா கதவை தட்டியும் பதில் இல்லை. உடனே விடுதி ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
கதவை உடைத்த போலீசாரின் அதிர்ச்சி
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்தனர். அப்போது ரஞ்சிதா குளியலறையில் பிணமாக கிடந்தார். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் மரணக்காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
Geyser வாயு கசிவு சந்தேகம்
ரேகாவின் விளக்கத்தில் குளியலறை Geyser கருவியில் வாயு கசிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. எனினும் போலீசார் மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.
அனுமதியின்றி இருந்த விடுதி
மேலும் சம்பவம் நடந்த விடுதி உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்ததும், வரி பாக்கி வைத்திருந்ததும் போலீஸ் விசாரணையில் வெளிச்சம் கண்டுள்ளது. விடுதி உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம், தங்கும் விடுதிகளின் பாதுகாப்புத்தர உயர்த்தப்பட வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இப்டிலாம் நடக்குமா! நம்பவே முடியல... கால் வலிக்காக ஊசி போட்ட பெண் திடீரென மயங்கி உயிரிழப்பு! ஓசூர் மருத்துவமனையில் பரபரப்பு....