×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கடலூரில் சாலையில் ஏற்ப்பட்ட திடீர் பள்ளதால் அச்சத்தில் வாகன ஓட்டிகள்.!

கடலூரில் சாலையில் ஏற்ப்பட்ட திடீர் பள்ளதால் அச்சத்தில் வாகன ஓட்டிகள்.!

Advertisement

கடலுார் - பண்ருட்டி சாலையில் கடலூர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்கு எதிரில் சாலையின் நடுவில் பாதாள சாக்கடை வாயிற்புழை அமைந்துள்ளது. இதன் அருகில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த திடீர் பள்ளத்தின் அருகே எச்சரிப்பு கூம்புகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளம் சாலையின் நடுவில் இருப்பதால் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் அந்த பகுதி வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பள்ளத்தை சரி செய்யாமல் எச்சரிக்கை கூம்புகளை மட்டும் வைத்திருப்பது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து விபத்து ஏற்படுவதை தடுக்கவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் அறிவுறுத்துகின்றனர்.

 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cuddalore #Sudden pothole #action
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story