எவ்வளவு சொல்லியும் கேட்கலை.. கணவனை இழந்த மகள் செய்த மோசமான காரியம்! நள்ளிரவில் தாய் செய்த பகீர் காரியம்!!
கோவை காரமடை அருகேயுள்ள கணுவாய்ப்பாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் நாகமணி. இவரது மகள் ந
கோவை காரமடை அருகேயுள்ள கணுவாய்ப்பாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் நாகமணி. இவரது மகள் நதியா. 31 வயது நிறைந்த இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் சரவணகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 13 வயதில் மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் சரவணகுமார் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் நதியா அடிக்கடி போனில் ஆண் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். இதனை அறிந்த மாமியாருடன் தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நதியா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கும் அவர் அடிக்கடி செல்போனில் ஆண் நண்பர்களுடன் பேசிகொண்டு, குழந்தைகளையும் சரியாக கவனிக்காமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த தாய் நாகமணி மகளை கடுமையாக கண்டித்துள்ளார்.
ஆனாலும் நதியா அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய் நாகமணி மகள் நதியாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கோபத்தில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த மகளின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டுள்ளார். இதில் தலை நசுங்கி நதியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் நாகமணியை கைது செய்தனர். மேலும் நதியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362