வீடியோ: பார்க்கவே மனசு பதறுது.. பிஞ்சு குழந்தையை தாய் கொடூரமாக தாக்கும் வீடியோ இதுதான்!! வைரல் வீடியோ இதோ!!
பெற்ற குழந்தையை தாய் மிக கொடுமையாக தாக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்போரை ப
பெற்ற குழந்தையை தாய் மிக கொடுமையாக தாக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மணலப்பாடி மதுரா-மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன். இவருக்கும் ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுக்கா ராம்பள்ளி கிராமத்தை சேர்ந்த துளசி(23) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று கோகுல்(4) மற்றும் பிரதீப் (2) என்ற மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை, தகராறு வரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் கனனவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், துளசி தனது 2 வயது மகன் பிரதீப்பை மிக கொடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் குழந்தையின் வாய் கிழிந்து இரத்தம் கொட்டிய நிலையில், குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின் தாயுடன் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே தனது கணவனை பிரிந்த துளசி, தனது குழந்தையுடன் ஆந்திராவில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்துவந்தார். தற்போது துளசி தனது குழந்தையை தாக்கிய இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானநிலையில், தற்போது போலீசார் துளசியை கைது செய்துள்ளனர்.
2 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட தாய் துளசி, செஞ்சி குற்றவியல் நடுவர் நீதிபதி தினேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். பிரேம்குமார் என்பருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தான் குழந்தையை தாக்கியதாக தாய் துளசி வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், பிரேம்குமாரை பிடிக்க தனிப்படை போலீஸ் சென்னை விரைந்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362