×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவர் இறந்த துயரம் தாங்காமல் 18 வயது மகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு.!

கணவர் இறந்த துயரம் தாங்காமல் 18 வயது மகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்-லலிதா தம்பதியினர். லலிதா அழகு கலை நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு 18 வயதில் தர்ஷினி என்ற மகள் உள்ளார். தர்ஷினி புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பாலமுருகன் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக உயிரிழந்துள்ளார். பாலமுருகனின் இறப்பிலிருந்து மீள முடியாமல் இருந்துள்ளனர் லலிதா மற்றும் தர்ஷினி.

இந்நிலையில் திடீரென லலிதா மற்றும் தர்ஷினி இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனை பார்த்த உறவினர்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Lalitha #Dharshini #suicide #Kallakurichi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story