ஒரே சேலையில் பிணமாக தொங்கிய தாயும் மகளும்: சோகத்தில் ஆழ்த்தும் பின்னணி..!
ஒரே சேலையில் பிணமாக தொங்கிய தாயும் மகளும்: சோகத்தில் ஆழ்த்தும் பின்னணி..!
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள அலங்கியம் பகுதியை சோ்ந்தவா் சரஸ்வதி. இவரது மகள் பூங்கொடி (29). இவருக்கும், தாராபுரம் அருகேயுள்ள தாசா்பட்டி பகுதியை சோ்ந்த காளிதாஸ் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு வா்ஷா (9) என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.
காளிதாஸ் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடா்ந்து அலங்கியம் காமராஜா் நகரில் உள்ள தனது தாய் சரஸ்வதி வீட்டில் பூங்கொடி தனது மகள் வா்ஷாவுடன் வசித்து வந்துள்ளார். வா்ஷா அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். பூங்கொடி குடும்ப வருமானத்திற்காக சலவை தொழில் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று கடைக்கு சென்றிருந்த சரஸ்வதி வீட்டிற்கு வந்தார். அப்போது பூங்கொடியும், வா்ஷாவும் ஒரே சேலையில் தூக்கு போட்டு பிணமாக தொங்கிக் கொண்டு இருந்துள்ளனர். இதனை கண்டு அதிர்சியடைந்த சரஸ்வதி அலறியுள்ளார். அதனை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தாயும் மகளும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னா், இந்த சம்பவம் குறித்து அலங்கியம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தாய்-மகள் உடல்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தனது கணவரின் நினைவு நாளில் இருந்தே பூங்கொடி மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இதன் காரணமாக மகள் வர்ஷாவை முதலில் சேலையால் தூக்கிலிட்டு கொன்று விட்டு அதே சேலையில் பூங்கொடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தாயும், மகளும் ஒரே சேலையில் பிணமாக தூக்கில் தொங்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362