×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட தாயும் மகளும்; கணவருக்கு நேர்ந்த சோகம்..!

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட தாயும் மகளும்; கணவருக்கு நேர்ந்த சோகம்..!

Advertisement

கணவர் திட்டியதால் தாயும் மகளும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் அன்பழகன்(50). இவரது மனைவி ராணி (38). இவர்களுக்கு லோகேஷ் என்ற மகனும், யோகிதா என்ற மகளும் உள்ளனர். 

அன்பழகன்  பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் ராணியின் தாயார் மீனாட்சி(65) கடந்த சில மாதங்களாக தங்கியுள்ளார்.

அன்பழகனுக்கு மீனாட்சி தனது வீட்டில் தங்கி இருப்பது பிடிக்காததால் அவரை ஊருக்கு அனுப்ப செல்லி மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.    .

இதனால் மனமுடைந்த அன்பழகனின் மனைவி ராணி, மாமியார் மீனாட்சி இருவரும் வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் காவல்துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவருகின்றனர். குடும்ப தகராறில் தாய்யும் மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kumbakonam #Commits Suicide #Daughter and Mother #Family Dispute #Police Enquiry
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story