பெற்ற மகன் என்றும் பாராமல் தாய் செய்த வெறிச்செயல்..! உடந்தையாக இருந்த மற்றொரு மகன்.! அதிர்ச்சி சம்பவம்.
Mother and brother killed own son in theni
தனது இளைய மகனுடன் சேர்ந்து மூத்த மகனை தாய் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தொட்டமாந்துறை ஆற்றுப்பகுதியில் அடையாளம் காண முடியாத அளவிற்கு ஆண் சடலம் ஓன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கொலை செய்தவரின் வாகன எண்ணை வைத்து கொலையாளிகளை பிடித்தனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தவர் கம்பம் மருவரசி மஹால் பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவரின் முதல் மகன் என்றும், தாயும், தம்பியும் சேர்ந்துதான் அவரை கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து செல்வி கூறுகையில், தனது முதல் மகன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாகவும், இதனால் தனது இளைய மகனுடன் சேர்ந்து ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். பெற்ற தாயும், தம்பியும் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362